எடப்பாடி கேட்டால் மோடி கையெழுத்து போட்டுவிடுவார்: அன்புமணி காமெடி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம். போதை ஒழிப்பு பிரிவு என தனியாக ஒரு பிரிவை உருவாக்குவோம்.

வங்கிக் கணக்கில் பத்தாயிரம் போடப்படும். பிரிட்ஜ் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் எடப்பாடி கூறியுள்ளார். ராணிப்பேட்டையில் 35 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட தொழிற்சாலையில் குரோமிய கழிவுகள் உள்ளது. இரண்டரை லட்சம் டன் குரோமிய கழிவுகள் அங்கே தேங்கி உள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கேட்டால் பிரதமர் மோடி உடனடியாக கையெழுத்து போட்டு திட்டங்களை கொடுத்துவிடுவார். இவ்வாறு பேசினார்.

* சவுமியா காரில் சோதனை
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். நேற்று அவர் தர்மபுரி நகராட்சி வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதிகோண்பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது, அவரது காரை தடுத்து நிறுத்தி, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, காரில் பணமோ, பரிசுப் பொருட்களோ இல்லை. இதையடுத்து, அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.

Related Stories: