பழநியில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் ேநற்று அளித்த பேட்டி:
ஜோசப் விஜய்யின் கட்சிக்கு ரொம்ப கெட்ட பெயராகி விட்டது. கரூர் நெரிசல் மரணங்கள், அவரது குடும்ப விவகாரம் போன்றவையால் பெயர் கெட்டுவிட்டது. மனைவியை வொர்த் இல்லை என்று கூறியது, குடும்ப பெண்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பொது இடங்களில் ஒழுங்கீனமாகவும், பைத்தியகாரத்தனமாகவும் நடக்கும் ஜோசப் விஜய் கட்சியின் தொண்டர்களால் அக்கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து விட்டது. அதன் உச்சகட்டமாக ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனம், தவெகவின் செல்வாக்கை குறைத்து விட்டது. 234 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் வாங்காது. ஓட்டை பிரிக்கும் வேலையைத்தான் தவெக செய்கிறது. அதே வேலையைத்தான் சீமானும் செய்கிறார். திமுகவிற்கு மாற்று அதிமுகதான் என்ற நிலையே தற்போதைய தேர்தலில் உருவாகி உள்ளது. சீமானின் தேர்தல் அறிக்கைகள் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானது. இவ்வாறு கூறினார்.
