- புதுச்சேரி
- திமுகா
- தலைமை நிர்வாக அதிகாரி
- கிறிஷ் சோதங்கர்
- சென்னை
- காங்கிரஸ்
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்-திமுக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது, என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று இரவு டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தார்.
அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் கூட்டணிக்குள் எந்த விதமான பிரச்னைகளும் இல்லை. தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகள் என்பது உட்பட, அனைத்தும் நல்லபடியாக நடந்து கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு, ராகுல் காந்தி, மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் விரைவில் வர இருக்கின்றனர். அவர்களுக்கான பிரசார ஷெட்யூல் தயார் செய்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அங்கிருந்து ஒப்புதல் கிடைத்ததும், ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரப் பயணத் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 28 தொகுதிகளுக்கும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கட்சி தலைமை பரிசீலித்துக் கொண்டு இருக்கிறது. வெகுவிரைவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
