கொல்கத்தா: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பேரவை தேர்தலுக்கு மேற்குவங்கத்தின் பிதான்நகர் காவல் ஆணையர் முரளிதர் சர்மா நியமிக்கப்பட்டார். இதேபோல் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் 5 மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளில் 5 அதிகாரிகளின் இடமாற்றத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதன்படி, முரளிதர் சர்மா, ரசா, அமன்தீப், ஆகாஸ் மக்ரியா மற்றும் பிரவீன் குமார் திரிபாதி ஆகிய 5 அதிகாரிகளின் இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர மற்ற 10 அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பணிகளை பார்வையிட உள்ளனர்.
தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட 5 மேற்குவங்க அதிகாரிகளின் இடமாற்றம் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- மேற்கு வங்கம்
- தேர்தல் ஆணையம்
- கொல்கத்தா
- பித் அண்ணகர்
- ஆணையாளர்
- முரளிதர் ஷர்மா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
