புதிதாக 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.78.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 60 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், ரூ.9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 வட்ட செயல்முறை கூடுதல் சேமிப்பு கிடங்குகள் ஆக மொத்தம் ரூ.88.06 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 78 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 60,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான சேமிப்பு கிடங்கு கொள்ளளவினை மேம்படுத்தும் விதமாக 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 வட்ட செயல்முறை கூடுதல் சேமிப்பு கிடங்குகள் ஆக மொத்தம் ரூ.88.06 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் நோக்குடன் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைத்திடவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் கடின உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்படும் நெல்லில் “ஒரு நெல்மணிக்கூட வீணாகக்கூடாது” என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவினை செயல் வடிவமாக்கும் வகையில் நவீன நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டம், சிறுபுலியூர் கிராமத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, நீடாமங்கலம் வட்டம், கமுககுடி கிராமத்தில் 11 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, மன்னார்குடி வட்டம், செருமங்கலம் கிராமத்தில் 9 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு; வலங்கைமான் வட்டம், திருவோணமங்கலம் கிராமத்தில் 8 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில் வட்டம், வானமாதேவி கிராமத்தில் 9 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு; செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் கிராமத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு; என மொத்தம் 78 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 60 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்களின் கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான சேமிப்பு கிடங்கு கொள்ளளவினை மேம்படுத்தும் விதமாக, அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், தேலூர் கிராமத்தில் 5 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், தமிழ்பாடி கிராமத்தில் 3 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு; என மொத்தம் 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 வட்ட செயல்முறை கூடுதல் சேமிப்பு கிடங்குகள் கட்டுமான பணிகளுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அர. சக்கரபாணி, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கே.எஸ். பழனிசாமி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆ. அண்ணாதுரை, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: