ரூ.167.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 4.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 167 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, 26 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கேத்லேப் கருவிகள், 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கருவி, டெலிகோபால்ட் கருவி உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கருவிகளை மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
கோத்தகிரி அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் திறப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசு மருத்துவமனை தற்போது 47 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு 3.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இக்கட்டடத்தின், தரைத்தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மருத்துவப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, சிறப்பு பிரிவு, செவிலியர்கள் அறை, முதல் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம், ஆண்கள் மற்றும் பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு, அறுவை சிகிச்சை பிந்தைய பிரிவு, ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 40 படுக்கைகள் அதிகரித்து 87 படுக்கைகள் வசதிகள் கொண்ட மருத்துவமனையாக கோத்தகிரி அரசு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

அன்னூர் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் திறப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அரசு மருத்துவமனை தற்போது 60 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அன்னூர் அரசு மருத்துவமனைக்கு 3.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.இக்கூடுதல் கட்டடத்தில் அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு, இரத்த சேமிப்பு மையம், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, முதன்மை மருத்துவ அலுவலர் அறை, அறுவை அரங்கு, அறுவை சிகிச்சை முன் கவனிப்பு பிரிவு, செவிலியர்கள் அறை, ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடலாடி அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு மருத்துவமனை தற்போது 32 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கடலாடி அரசு மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.இக்கூடுதல் கட்டடத்தின், தரைத்தளத்தில் மருந்தகம், எக்ஸ்ரே, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள், பதிவு அறை, பல் சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், செவிலியர்கள் அறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தாராபுரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் திறப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனை தற்போது 150 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை அரசு தலைமை மருத்துவமனைக்கு நிகராக வலுப்படுத்தும் பொருட்டு மருத்துவக் கருவிகளுடன் 24 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இக்கட்டடத்தின் தரை தளத்தில் எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, அறுவை அரங்குகள், இருதய சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவு, முதல் தளத்தில் இரத்த சுத்திகரிப்பு பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, செவிலியர் மற்றும் மருத்துவர்கள் அறை, மருந்து கிடங்கு, இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு, அறுவை அரங்கு, பணியாளர்கள் அறை, அறுவை சிகிச்சை முன் கவனிப்பு பிரிவு, மூன்றாவது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை அறை, செவிலியர்கள் அறை, நான்காவது தளத்தில் மருந்து கிடங்கு, ஆண்கள் அறுவை சிகிச்சை அறை, பதிவு அறை, ஐந்தாவது தளத்தில் குழந்தைகள் நலப்பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆறாவது தளத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் கண் சிகிச்சை பிரிவு, கண் அறுவை அரங்கம், கூட்ட அரங்கு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 82 படுக்கைகள் அதிகரித்து 232 படுக்கைகள் வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தாராபுரம் அரசு மருத்துவமனையாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ECG Machine, Defibrillator, Multipara monitor, Boyles apparatus, C-arm, Dialysis Machine போன்ற பல்வேறு மருத்துவக் கருவிகளையும் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் செவிலியர் மாணவியர் விடுதிக் கட்டடங்கள் திறப்பு

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள நர்சிங் பள்ளி, நூற்றாண்டு பழமையான வரலாற்றைக் கொண்ட பள்ளியாகும். இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு, செவிலியர் பயிற்சிப் பள்ளிக்கு 13 கோடி ரூபாயும், மாணவிகள் விடுதிக்கு 22 கோடி ரூபாயும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளி மற்றும் மாணவிகள் விடுதிக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இப்புதிய செவிலியர் பயிற்சிப் பள்ளி 36,476.40 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் தலைமை ஆசிரியர் அறை, துணை தலைமை ஆசிரியிர் அலுவலக அறை, நூலகம், மின் அறை, முதல் தளத்தில் பொது அறை, வகுப்பு அறை, துறை தலைவர் அறைகள், இரண்டாம் தளத்தில் வகுப்பு அறை, துறை தலைவர் அறைகள், பொது அறை, கனிணி ஆய்வகம், மூன்றாம் தளத்தில் வகுப்பு அறை, OBG & Paediatric ஆய்வகம், ஆசிரியர்கள் அறை, முன் மருத்துவ அறிவியல் ஆய்வகம், நான்காம் தளத்தில் வகுப்பு அறை, ஊட்டச்சத்து ஆய்வகம், CHN ஆய்வகம், பதிவு அறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.இப்புதிய செவிலியர் மாணவியர் விடுதிக் கட்டடம் தரை மற்றும் ஆறு தளங்களுடன் சுமார் 300 மாணவியர் தங்கும் வசதியுடனும், அலுவலக அறை, பார்வையாளர் அறை, மாணவிகள் வாசிப்பு அறை, சமையற்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்துள்ள செவிலியர் பயிற்சி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடம் 31 கோடியே 08 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இப்புதிய செவிலியர் பயிற்சி பள்ளிக் கட்டட வளாகத்தில், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு செவிலிய மாணவியருக்காக மூன்று வகுப்பறைகள், மாணவியர்கள் செவிலியர் பயிற்சியை கற்றுத் தருவதற்கான ஆறு ஆய்வகங்கள் (Pre Clinical Science Lab, Nursing Foundation Lab, Mid Winery and Patrick Lab, Community Health Nursing Lab and Nutrition Lab) அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நூலகம், கணினி ஆய்வகம், ஒலி, ஒளி சாதன அறை, பல்நோக்கு கூடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாணவியர் விடுதி வளாகத்தில், 300 மாணவியர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்வதற்கான தங்கும் அறைகளும், உடற்பயிற்சி கூடம் மற்றும் பொழுதுபோக்கு கூடமும், நவீன சமையல் கூடமும் உணவருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை கூடுதல் கட்டடம்

தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை கடந்த 47 ஆண்டுகளாக 150 படுக்கைகளுடன் இப்பகுதியை சார்ந்த மற்றும் வடசென்னை பகுதி பொது மக்களுக்கு சிறப்பு சிகிக்சைகளை வழங்கி வருகிறது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் கட்டடங்கள் மற்றும் படுக்கைகளின் தேவையின் பொருட்டு 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய இப்புதிய கூடுதல் கட்டடம் 100 படுக்கை வசதிகளுடனும், அதிநவீன சிகிச்சை அளிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிநவீன அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் போன்ற நவீன மருத்துவ உபகரணங்களுடன் நிறுவப்பட்டு பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கூடுதல் கட்டடம் மருத்துவ பயனாளர்களுக்கு இடநெருக்கடியின்றி நவீன மருத்துவ கட்டமைப்பு வசதிகளுடன் சிகிச்சை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவப் பிரிவு கதிர்வீச்சு சிகிச்சை பிரிவுக் கட்டடம் திறப்பு

அரசு தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புற்றுநோய் மருத்துவப் பிரிவுக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இதில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான டெலி கோபால்ட் கருவி, 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கோபால்ட் கதிர்வீச்சு சோர்ஸ் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இப்புற்றுநோய் மருத்துவப் பிரிவில் உள் நோயாளிகள் பிரிவில் 15 படுக்கை வசதிகள் மருத்துவ சேவைக்காக உள்ளன.

புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த 51 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 2 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 53 துணை சுகாதார நிலையங்கள், 18 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள், 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான வெளி நோயாளி பிரிவுக் கட்டடங்கள், 10 ஆய்வகங்கள் மற்றும் நோய் கண்காணிப்பு பிரிவுக் கட்டடங்கள், என மொத்தம் 97 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் திறப்பு

திருவள்ளூரில் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

கடலூர் மற்றும் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள கேத்லேப் கருவிகள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல்

கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும், நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும் நிறுவப்பட்டுள்ள கேத்லேப் கருவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இதன்மூலம், கரோனரி ஆஞ்சியோகிராம், கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி, தற்காலிக / நிரந்தர இதயமுடுக்கி போன்ற மேம்பட்ட இதய பராமரிப்பு சேவைகளை மக்கள் பெறமுடியும்.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கருவியை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல்

அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கருவியை மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நவீன எம்.ஆர்.ஐ. வசதி மூலம் வழக்கமான பரிசோதனைகளுடன் சேர்த்து இதய எம்.ஆர்.ஐ., எம்.ஆர். அஞ்சியோகிராபி, எம்.ஆர். வெனோகிராபி, புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் உள்ளிட்ட சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும். இதன்மூலம், புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், பக்கவாதம் மற்றும் நரம்பியல் நோய்களை துல்லியமாக கண்டறிதல், முதுகெலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகளின் சரியான மதிப்பீடு, வயிறு மற்றும் மார்பு உறுப்புகளின் விரிவான பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

 

Related Stories: