கோவை: ஏனுங்க தலைவரே சவுக்கியமா என்று கேட்டு பாசம் பொழிந்த கோவை மக்கள் திளைக்கவைத்துவிட்டீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பாசக்கார மேற்கு மண்டலத்தில் தொண்டர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தித் திணிப்புப் போராட்டத்தில் பொள்ளாச்சியை யாரும் மறக்க முடியாது. கோவையில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
