*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சித்தூர் : சித்தூர் எம்.எஸ்.ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தூர் மாநகரத்தில் முக்கிய சந்திப்பான எம்.எஸ்.ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி வழியாக சென்று வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் தெரிவிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், எம்.எஸ்.ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
