*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நெல்லை : நெல்லை அருகன்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி ஒட்டகம் ஒன்று கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், அதனை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கவுன்சிலர் சுடலைகண்ணு வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்த மனு விவரம்; நெல்லை அருகே உள்ள அருகன்குளத்தில் மேல ராமசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோயிலின் தென்பகுதியில் கடந்த இரு நாட்களாக ஒட்டகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஒட்டகத்துக்கு உணவு மற்றும் தண்ணீர் இன்றி மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒட்டகத்தின் பரிதாபத்துக்குரிய நிலையை கண்டு மனவேதனை அடைந்துள்ளனர்.
ஆகவே சோர்வுடன் காணப்படும் ஒட்டகத்தை மீட்டு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் உணவு, தண்ணீர் வழங்கி பராமரித்திடவும், இதற்குகாரணமானவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
