உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் கொள்முதல் விலை ரூ.8000 லிருந்து 6200 ஆக சரிவு

*விவசாயிகள் கலக்கம்

வேலாயுதம்பாளையம் : ஒரு டன் விற்பனை ரூபாய் 8000 லிருந்து ரூபாய் 6200 ஆக குறைந்துள்ளதால், தேங்காய் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உலக அளவில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை உலகின் முன்னணி உற்பத்தியாளர்களாக உள்ளனர்.

இதில் இந்தியா தேங்காய் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது, குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் இந்திய ேதங்காய் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் (டிசம்பர் 2025) தமிழகத்தில் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக விலை குறைந்துள்ளது. அதே சமயம் சில மாவட்டங்களில் வரத்து குறைவால் விலை உயர்வையும் சந்தித்துள்ளது. இது சந்தை நிலவரத்தில் மாற்றங்களைக் காட்டுகிறது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலாயுதம்பாளையம், வாங்கல், குப்பிச்சிபாளையம், தவிட்டுப்பாளையம், நொய்யல், உப்பிடமங்கலம், மற்றும் அமராவதி காவேரி ஆற்று படுகைகளில் தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,000 ஏக்கர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, தாராபுரம், உடுமலைப்பேட்டை, பேராவூரணி, தென்காசி, செங்கோட்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு பகுதியில் விளையும் தேங்காய் தரத்திற்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வரை ஒரு டன் தேங்காய் ரூபாய் 8000க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு டன் ரூபாய் 6200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இந்த கொள்முதல் விலை சரிவு என்று கூறப்படுகிறது.

இருப்பினும் வியாபாரிகள் இதே விலை விவசாயிகளுக்கு கொடுப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் தேங்காய் விலை குறைவாக இருந்தால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஓரளவு கட்டுமான விலை தென்னை விவசாயிகளுக்கு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் இந்த மகிழ்ச்சியை நீடிக்கவில்லை.

தேங்காய் உற்பத்தி பண்ணுவதற்கு செலவும் அதிகமாவதுடன் ஆள்செலவு அதிக செலவு ஏற்படும் ஏற்படுத்துவதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு எப்போதும் ஒரு நியாமான விலை கிடைத்திட தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு ரேஷன் கடைகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள பாமாயிலை நிறுத்திவிட்டு பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் தென்ன விவசாயிகள் பாதுகாக்கப்படுவதுடன் கூடுதல் தென்னை சாகுபடி செய்யப்படும். மேலும் தேங்காய் விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் தென்னைகளுக்கு மதிப்பு கூட்டு முறையில் உற்பத்தி செய்து தேங்காய் எண்ணெய், தேங்காய் மிட்டாய், மற்றும் தேங்காயிலிருந்து பல்வேறு உணவு பொருட்கள் தயார் செய்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சந்தைப்படுத்தி விற்பனை செய்து லாபம் ஈட்டுவர்.

இவ்வாறான மதிப்பு கூட்டு முறைக்கு விவசாயிகளுக்கு தக்க பயிற்சி கொடுத்தால் கூடுதல் வசதியாக அமையும். தற்போது விலை குறைந்து வருவதால் தேங்காய் வியாபாரிகள் இன்னும் விலை குறையும் என்று தற்போது விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்வதில் ஆர்வம் கட்டுவதை குறைத்துள்ளனர். விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகளும் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் ேவண்கோள் விடுத்துள்ளனர்.

Related Stories: