பொள்ளாச்சி வழியாக செல்லும் முக்கிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்; தொடரும் விபத்து அபாயம்

*முறைப்படுத்த பொது மக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வழியாக பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளான கோவை ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.

ஆனால், இந்த நெடுஞ்சாலையோரங்களில் பகல் நேரத்தில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால், பிற வாகனங்களுக்கு இடையூறு அதிகமாக உள்ளது, அடிக்கடி எழும் குற்றச்சாட்டாக உள்ளது.

அதிலும் கோவை ரோடு காந்தி சிலையில் இருந்து பல்லடம் ரோடு, சிடிசி மேடு வரையிலும் ரோட்டை மறைத்தவாறு வாகனங்கள் நிறத்தப்படுவது, அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.

சில நேரத்தில் ரோட்டோரம் மட்டுமின்றி, ரோட்டின் பாதி பகுதியும் மறைத்தவாற வாகனத்தை நிறுத்தி விட்டு, அருகே உள்ள வணிக நிறுவனங்களுக்கு சென்று விடுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் வெகுநேரம், ரோட்டை மறைத்தவாறு வாகனம் நிற்பதுடன் பிற வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் இடையூறும் ஏற்படுகிறது. அதனை முறைப்படுத்த வேண்டிய போக்குவரத்து போலீசார், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக புகார் எழுகிறது.

இதில் நேற்று, கோவை ரோட்டோரம் பல்வேறு வாகனங்கள் ரோட்டின் பாதியளவு மறைத்தவாறு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

ஆனால், மீண்டும் மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்தாவறு நிறுத்தப்படும் வாகனங்களால், மேலும் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய செயலை தடுப்பதற்கான நடவடிக்கையில், சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: