×

எப்ஏ கோப்பை கால்பந்து ஓன் கோலால் சோகம் மேக்லஸ்பீல்ட் பரிதாபம்: 5வது சுற்றில் பிரென்ட்போர்ட்

மேக்லஸ்பீல்ட்: எப்ஏ கால்பந்து போட்டியில் நேற்று, மேக்லஸ்பீல்ட் அணி வீரர் தவறுவதாக அடித்த ஓன் கோலால், பிரென்ட்போர்ட் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. எப்ஏ கோப்பை கால்பந்து போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகின்றன. மேக்லஸ்பீல்ட் நகரில் நேற்று நடந்த போட்டியில் மேக்லஸ்பீல்ட் – பிரென்ட்போர்ட் அணிகள் மோதின.

போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். இருப்பினும், இரு அணிகளின் கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டு கோல்கள் விழாமல் தடுத்தனர். முதல் பாதியில் கோல் எதுவும் விழாமல் அடுத்த கட்டத்துக்கு போட்டி நகர்ந்தது. இரண்டாவது பாதியில் கோல் போட்டு விடும் முனைப்பில் இரு அணி வீரர்கள் பம்பரமாய் சுழன்றாடி தீவிரம் காட்டினர்.

போட்டியின் 70வது நிமிடத்தில் மேக்லஸ்பீல்ட் அணி வீரர் சாம் ஹீத்கோட் அடித்த பந்து தவறுதலாக எதிரணிக்கு கோலாக மாறியது. அதன் பின் இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. அதையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் பிரென்ட்போர்ட் அணி வெற்றி பெற்று 5வது சுற்றுக்குள் நுழைந்தது.

Tags : FA CUP FOOTBALL ,MACLESFIELD ,BRENTFORD ,Macclesfield ,FA ,McClusfield ,FA Cup ,England ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணி!!