- பிரிதிகா ராவல்
- பெண்கள்
- ஆஸி
- புது தில்லி
- பிரதிகா ராவல்
- இந்தியப் பெண்கள்
- ஆஸ்திரேலியா மகளிர்
- பெண்கள் கிரிக்கெட் அணி
- ஹர்மன் ப்ரீத் கவுர்
- ஆஸ்திரேலியா
- பெண்கள்
புதுடெல்லி: ஆஸ்திரேலியா மகளிர் அணியுடன் மோதவுள்ள இந்திய மகளிர் அணியில் பிரதிகா ராவல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. ஆஸி அணியுடன் இந்திய மகளிர் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி வரும் 24ம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்கவுள்ளது.
இந்திய அணி வீராங்கனைகளில் ஒருவரான அதிரடி பேட்டர் பிரதிகா ராவல், வங்கதேச அணியுடன் கடந்தாண்டு அக்டோபரில் நடந்த போட்டியின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். தற்போது அவர் முழுமையாக நலம் பெற்றதை அடுத்து, இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டது. இந்திய மகளிர் அணி வரும் 27ம் தேதி மற்றும் மார்ச் 1ம் தேதி ஹோபர்ட் நகரில் நடக்கும் 2 மற்றும் 3வது போட்டிகளில் ஆடவுள்ளது. ஒரு நாள் போட்டிகளுக்கு பின்னர், மார்ச் 6ம் தேதி நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியிலும் பிரதிகா ராவல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இந்திய மகளிர் அணி
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ரேணுகா தாக்குர், ஸ்ரீசரணி, வைஷ்ணவி சர்மா, கிரந்தி கவுட், ஸ்நேஹ் ராணா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், உமா சேத்ரி, காஷ்வீ கவுதம், அமன்ஜோத் கவுர், ஜெமிமா ரோட்ரிகஸ், ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல்.
