×

கைவிடப்பட்டது 32வது டி20 நின்று ஆடிய மழை சூப்பர் 8ல் ஜிம்பாப்வே

பல்லேகெலே: அயர்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஜிம்பாப்வே அணி, பி பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை டி20 தொடரின் 32வது போட்டி, இலங்கையின் பல்லேகெலே நகரில் அயர்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையே நடக்கவிருந்தது. போட்டி துவங்கும் முன் வெளுத்து வாங்கிய கனமழை நீண்ட நேரம் நீடித்தது.

அதனால் ஒரு பந்து கூட ஆடாத நிலையில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அதையடுத்து, ஜிம்பாப்வே அணி, 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு டிரா உடன், 5 புள்ளிகள் பெற்றதால், புள்ளிப் பட்டியலில் இலங்கைக்கு அடுத்ததாக 2ம் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.

இந்த பிரிவில் அயர்லாந்து 4 போட்டிகளில் 3, ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் 2, ஓமன் 3 போட்டிகளில் 0 புள்ளிகள் பெற்றுள்ளன. இலங்கை அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Zimbabwe ,Super 8 ,32nd T20 ,Pallekele ,World Cup T20 ,Ireland ,Pallekele, Sri Lanka ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணி!!