அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்துக்கு பெரும் அச்சுறுத்தல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

 

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பரந்த சலுகைகளை வழங்கி உள்ளது. இந்த சலுகைகள் இந்தியாவின் பொருளாதாரம், விவசாயம் மற்றும் தேசிய இறையாண்மைக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. பழங்கள், பருத்தி, மரக் கொட்டைகள், சோயாபீன் எண்ணெய் மற்றும் சில உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு வரியை பூஜ்ஜியமாக்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த முடிவு நாடு உள்ள லட்சக்கணக்கான ஆப்பிள் விவசாயிகள், பருத்தி, சோயா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.பருத்தி விவசாயிகள் பேரழிவை எதிர்கொள்வார்கள். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட விஷயங்களில் தலையிடுவதால் இந்த ஒப்பந்தம் நமது இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும். எனவே, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தக் கூடாது. இதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: