புதுடெல்லி: போலி ஆவணம் கொடுத்து பா.ம.க கட்சியை அபகரித்ததாக கூறி அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். முன்னதாக வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது. குறிப்பாக கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. மேலும்அங்கீரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரரரின் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது, அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது.
குறிப்பாக பாமகவில் இதே நிலை நீடித்தால் சின்னத்தை முடக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். இருப்பினும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி உங்களது கோரிக்கையை வைக்கலாம் என்று உத்தரவிட்ட நீதி நீதிமன்றம் , பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை கடந்த டிசம்பர் மாதம் முடித்து வைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உத்தரவுக்கு எதிராகவும், அதனை மறுஆய்வு செய்யக்கோரியும் அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவானது இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
