கர்நாடக மாநிலம் விஜயபுரா அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: 2 பேர் காயம்

 

விஜயபுரா: கர்நாடக மாநிலம் விஜயபுராவில் ஒரு தனியார் ரெட் பேர்ட் தனியார் பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.விஜயபுரா மாவட்டம், பாபலேஷ்வர் தாலுகாவின் மங்களூரு கிராமத்தில் ஒரு தனியார் பயிற்சி ஜெட் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் திடீரென்று விபத்துக்குள்ளாகி ஒரு விவசாயியின் வயலில் விழுந்து மூன்று துண்டாக நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த இரண்டு பேர் படுகாயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலபுர்கியில் இருந்து பெலகாவிக்குச் செல்லும் வழியில் எரிபொருள் தீர்ந்து போனதால் விமானம் விபத்துக்குள்ளானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
ரெட் பேர்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் செஸ்னா 172 டேங்கோ சார்லி இலகுரக விமானத்தில் கேப்டன் குணால் மல்ஹோட்டா மற்றும் பயிற்சி விமானி குணால் சங்கர் ஆகியோர் இருந்தனர். பாபலேஷ்வர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்,

 

Related Stories: