டெல்லி: மே 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே.3ல் நடைபெறும். நீட் தேர்வு எழுத இன்று முதல் மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். மே.3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
