ஓசூர், போச்சம்பள்ளி பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

*வாகன ஓட்டிகள் அவதி

ஓசூர் : ஓசூர், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழக எல்லையான ஓசூர், கடல் மட்டத்தில் இருந்து 2,883 அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் நிலவும்.

இந்தாண்டு கடந்த சில நாட்களாக ஓசூர், போச்சம்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் பனி நிலவி வருகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகள், கிளினிக்குகளில் சிகிச்சைக்காக வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

கடும் குளிர் காரணமாக, அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வோர், பணிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதியம் 3 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கி, நேரம் செல்ல செல்ல பனிப்பொழிவு தொடங்கி, காலை 10 மணி வரை பனிக்காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் புகை மண்டலம் போல சாலைகள் முழுவதும் பரவி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்கின்றனர். பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஸ்வெட்டர், ெஜர்க்கின் உள்ளிட்ட குளிர்கால ஆடைகளை அணிந்து செல்கின்றனர்.

Related Stories: