தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் பிப்.4,5ம் தேதியில் தேர்தல் கமிஷன் ஆலோசனை

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல், மே மாதம் சட்டப்பேரவைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் இரண்டாவது வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக வரும் பிப்ரவரி 4,5ஆம் தேதிகளில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: