மும்பை: சண்டிகர் ஐடிஎப்சி வங்கி கிளையில் பணியாற்றும் சில அதிகாரிகள் அரியானா அரசாங்க கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஸ்வாகா செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நான்கு அதிகாரிகளை ஐடிஎப்சி வங்கி சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரியானா அரசுத் துறையிடமிருந்து வங்கியின் கணக்கை மூடிவிட்டு வேறு வங்கிக்கு நிதியை மாற்றக் கோரி கோரிக்கை வந்தது.
அப்போது அரசு நிறுவனங்களின் கணக்கில் இருந்து மொத்தம் ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தீவிர ஆய்வில் வங்கியின் பதிவுகளில் உள்ள இருப்புகளுக்கும், அரசு நிறுவனங்கள் குறிப்பிடும் இருப்புகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டன. வங்கியின் முதற்கட்ட உள் மதிப்பாய்வின்படி, இந்த விஷயம் சண்டிகர் கிளையில் நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளது.
