புதுப்படம் பற்றி சிம்பு திடீர் அறிவிப்பு

சென்னை: தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ என்ற படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள சிம்பு, இப்படத்துக்கான டப்பிங்கை முடித்துவிட்டார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சிம்பு, இப்படத்தின் இயக்குனராக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தேர்வு செய்துள்ளார். இப்படம் குறித்து அறிவித்து நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், தனது புதிய படத்தைப் பற்றி சிம்பு அறிவித்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடித்து திரைக்கு வந்த அவரது 4 படங்களின் கலவையாக இப்படம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சிம்பு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z என்பது 1995 முதல் 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம் அடுத்த படம்’ என்று அறிவித்திருக்கிறார். இயக்குனர், தயாரிப்பாளர் பற்றி தெரிவிக்கவில்லை. இது சிம்பு நடிக்கும் 50வது படமாகும்.

The post புதுப்படம் பற்றி சிம்பு திடீர் அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: