தொடர்ந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் எதிரொலி: ரூ.2 கோடியில் புல்லட் புரூஃப் காருடன் சல்மான்கான் பாதுகாப்புக்கு 60 பேர் நியமனம்

மும்பை: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் ெதாடர்ந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் வருவதை தொடர்ந்து, தனது பாதுகாப் புக்காக ₹2 கோடியில் ‘புல்லட் புரூஃப்’ கார் ஒன்றை சல்மான்கான் வாங்கியுள்ளார். 60 பேர் கொண்ட பாதுகாப்புக் குழுவையும் அவர் நியமித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில அரசியல் தலைவரும், நெருங்கிய நண்பருமான பாபா சித்திக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு முன்னணி நடிகர் சல் மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீண்டும் கொலை மிரட் டல் விடுத்துஇருப்பதை தொடர்ந்து, தனது பாதுகாப்புக்காக ₹2 கோடி மதிப்பிலான ‘புல்லட் புரூஃப்’ காரை சல்மான்கான் வாங்கியிருக்கிறார். இந்திய வாகனச்சந்தையில் கிடைக்காத இந்தக் கார், துபாயில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் காரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு அதிக பணம் செலவாகும் என்று தெரிகிறது.

இந்த வாகனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அதிவேக புல்லட் ஷாட்டுகளையும் தடுக்கக் கூடிய திறன் கொண்ட கண்ணாடி கவசங்கள் அமைக்கப்பட்டு இருக் கின்றன. வெடிமருந்துகளைக் கண்டறிந்து எச்சரிக்கின்ற அமைப்பும், உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண முடியாத விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சல்மான்கான் மற்றும் அவரது தந்தைக்கு குண்டு துளைக்காத வாகனம் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்நிலையில், சல்மான்கான் தொகுத்து வழங்கும் தனியார் டி.வி நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக 60 பேர் கொண்ட பாதுகாப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான்கானுக்கு மிரட்டல் விடுத்து வருவதால், மும்பை போலீசாரும் கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

The post தொடர்ந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் எதிரொலி: ரூ.2 கோடியில் புல்லட் புரூஃப் காருடன் சல்மான்கான் பாதுகாப்புக்கு 60 பேர் நியமனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: