ரஜினி ரசிகனான எனக்கு கமல் கொடுத்த ஊக்கம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள :அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடியாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசினார். அது வருமாறு: இப்படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பற்றியது. அவரது கேரக்டரில் நான் நடித்துள்ளேன். காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது.

மலையாள ‘பிரேமம்’ படத்தைப் பார்த்துவிட்டு சாய் பல்லவியைப் பாராட்டி போனில் பேசியபோது, ‘ரொம்ப நன்றி அண்ணா’ என்று சொன்னார். என்றாவது ஒருநாள் நாம் சேர்ந்து நடிப்போம் என்று, அன்று சொன்னது இன்று நடந்துள்ளது. ‘அமரன்’ படத்தைப் பார்த்த கமல் சார், மிகச்சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். நான் ரஜினி சார் ரசிகன் என்ற விஷயம் அவருக்கு தெரியும். அதுபற்றி யோசிக்காத அவர், தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தினார். ‘அமரன்’ படத்தை ரஜினி சார் முதல்நாளே பார்ப்பார்.

அதுதான் அவருக்கும், கமல் சாருக்கும் இடையில் இருக்கும் அன்பு. அவர்கள்தான் உண்மையான அபூர்வ சகோதரர்கள். ‘பிரின்ஸ்’ படம் ரிலீசானபோது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். இதோடு நான் காலி என்றுகூட பேசினார்கள். ஒருநாள் அஜித் குமாரை சந்தித்தபோது, ‘உங்கள் வளர்ச்சியைப் பார்த்து நிறையபேர் பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்தால், நீங்கள் வேகமாக முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம்’ என்று சொன்னார். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுத்தான் சாதிக்க வேண்டும். ‘அமரன்’ படம் வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. இந்த படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

The post ரஜினி ரசிகனான எனக்கு கமல் கொடுத்த ஊக்கம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: