பிளாக் படத்தில் நடிக்க ரிஸ்க் எடுத்தது ஏன்? ஜீவா பேச்சு

சென்னை: ‘பிளாக்’ படத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்துக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நடத்தியது. இதில் ஜீவா பேசியது: இந்த படத்திற்கு இரண்டாவது பாகம் எப்போது எடுக்கிறீர்கள் என எல்லோரும் கேட்கிறார்கள். இந்த கம்பெனி என்னிடம் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எடுத்து தான் ஆக வேண்டும்.

இதற்குமுன் வணிக ரீதியான படங்களில் தான் நடிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனால் தான் எனக்கு சில சரிவுகள் ஏற்பட்டது. கோ போன்ற படத்திற்குப் பிறகு இப்படி ஒரு படத்தில் நடிக்க ரிஸ்க் எடுக்கிறேன் என்றால் அந்த சரிவு கூட ஒரு காரணமாக இருக்கலாம். எல்லா படமும் நன்றாக ஓட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் காலையில் கேமரா முன் நிற்கிறோம். படம் பார்த்தவர்கள் நீங்கள் நன்றாக நடித்து இருக்கிறீர்கள் என கூறினார்கள். நான் சாதாரணமாகத்தான் நடித்திருந்தேன். அதனால் இந்த பாராட்டுக்களுக்கு படக்குழுவினர் தான் காரணம் என்றார். விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post பிளாக் படத்தில் நடிக்க ரிஸ்க் எடுத்தது ஏன்? ஜீவா பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: