மற்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கினாலும் அப்பா (சிவாஜி) நடிப்பில் ‘பாகப்பிரிவினை’, ‘படிக்காத மேதை’, ‘பெற்ற மனம்’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பந்த பாசம்’, ‘பார் மகளே பார்’, ‘பச்சை விளக்கு’, ‘பழனி’, ‘பட்டத்து ராணி’, ‘சாந்தி’, ‘பாலாடை’, ‘பாதுகாப்பு’ போன்ற பத்தொன்பது படங்களை இயக்கினார். மேலும் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், 2 இந்தி படங்களையும் இயக்கினார். இப்படி தமிழ் படங்களின் பெருமையை இந்தி வரை கொண்டு சென்ற பெருமைக்குரிய இயக்குனர் பீம்சிங். அவரது ஆன்மா தனது படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. படைப்புக்கும் அழிவில்லை. படைத்தவருக்கும் அழிவில்லை. கலைஞர்கள் எப்போதுமே மக்களுக்கானவர்கள். அவர்கள் எப்போதும் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பீம்சிங்கும், அய்யாவும் நமோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிரபு தெரிவித்துள்ளார்.
The post சிவாஜி பீம்சிங் உன்னத உறவு: பிரபு நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.