உடனடியாக கடற்கரை கப்பல்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகளும் மீட்பு பணிகளும் துரிக்கப்படுத்தப்பட்டன. உள்ளுர் மீனவர்களும் கடலில் நீந்தி சென்று பயணிகள் மீட்டு கரைக்கு அழைத்து சென்றனர். லைப் ஜாக்கெட் உதவியுடன் ஏராளமானோர் நீந்தி கரைக்கு சென்றனர். கரைவந்து சேர்ந்தவர்கள் அதிர்ச்சியுடன் மீட்பு பணிகளை பார்த்து கொண்டு இருந்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தீவிபத்து காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட இந்தோனேசியாவில் படகுகள், கப்பல்கள், விபத்தில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது.
The post இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் நேரிட்ட தீ விபத்து: 5 பேர் உயிரிழந்த நிலையில் 280-க்கு மேற்பட்டோர் தப்பினர் appeared first on Dinakaran.
