பாஜவிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கிறது. ஆனால், தேர்தல் வெற்றிக்கு இதுமட்டும் போதாது! பூத் அளவில் வெற்றி பெறும் வாக்குகள்தான் தொகுதியில் வெற்றி பெற வைக்கும். தொகுதிகளை வென்றால்தான் ஆட்சி! அதனால், பூத் அளவிலான மைக்ரோ மேனேஜ்மெண்டும் மிக முக்கியம். தமிழ்நாடு முழுவதும் எத்தனை உட்கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்.
அதெல்லாம் தொய்வில்லாமல் சொன்ன தேதியில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றால், மீண்டும் நம்முடைய ஆட்சிதான் வர வேண்டும் என்று புரிய வையுங்கள். ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொறுப்பை வழங்கியிருக்கிறேன். அதை சிறப்பாக – எந்த விமர்சனமும் இல்லாமல், செய்து காட்டினால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது’’ என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக இன்று முதல் சந்திக்க உள்ளார். அந்த வகையில், \‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை முதல் நாளில் அவர் சந்திக்கிறார். ெதாடர்ந்து அவர் 234 தொகுதி நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், வெற்றி வாய்ப்பு தொகுதிகளில் எவ்வாறு இருக்கிறது.
மக்கள் ஆட்சியை பற்றி என்ன நினைக்கிறார்கள். திமுக அரசு செய்த மக்கள் நலன் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள். மக்கள் இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள், தொகுதிகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்று தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கேட்க உள்ளார். நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்கள் இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள், தொகுதிகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்று தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கேட்க உள்ளார்.
The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3 தொகுதி நிர்வாகிகளுடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் பேசுகிறார் appeared first on Dinakaran.