ராஜேந்திர சோழனுக்கு விழா எடுத்து இருக்கிறோம் என பிரதமர் மோடி வட மாநிலத்தில் பேச வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 3 லட்சம் கோடி கொடுத்து இருப்பதாக மோடி கூறுகிறார். அமித்ஷா 6.80 ஆயிரம் கோடி என்று சொல்கிறார். எல்.முருகன் 12 லட்சம் கோடி என்று சொல்கிறார். என ஒவ்வொரு நபரும் கோடிக் கணக்கில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக மாற்றி மாற்றி பேசுகின்றனர். இதில் யார் சொல்வது உண்மை? காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது தான் அதிக நிதி தமிழகத்துக்கு கொடுத்துள்ளது.
எம்.பி என்ற அடிப்படையில் திருமாவளவன் பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை திருப்புமுனை என அதிமுக மாஜிஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது அறியாமை. இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. எங்கள் கூட்டணி எக்கு கோட்டையாக உள்ளது. இங்கு ஒரு செங்கலை கூட உருவ முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post ஒரு செங்கலை கூட உருவ முடியாது இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.
