சென்னை: சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் துவக்கி வைத்தார். மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் இன்று சென்னை, தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, கூட்டுறவுத்துறையின் சார்பில் 49 அறிவிப்புகள் சட்டமன்றத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி சென்னை, தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில் 4 தளங்களுடன் 19,464 சதுர அடி பரப்பளவில் ரூ.8கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படவுள்ளது. ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தின் தரைத்தளத்தில் இப்பகுதி மக்களுக்காக சென்னை மத்திய கூட்டுறவு வங்கி கிளை, ஏ.டி.எம் மையம், சிறிய பல்பொருள் சிறப்பங்காடியும், முதல் தளத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்கான அலுவலகங்களும், இரண்டாம் தளத்தில் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கான வகுப்பறைகள், மூன்றாம் தளத்தில் சென்னை கூடுறவு மேலாண்மை நிலையத்திற்கான நவீன வகுப்பறைகள் (Smart Class Room) மற்றும் தேவுக்கூடமும், நான்காவது தளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் மற்றும் அவைக்களம் (Auditorium) ஆகியன அமையவுள்ளது. இந்நிகழ்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர்.க.நந்தகுமார்.இ.ஆப., அவர்கள், கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் முனைவர்.க.சொ.இரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
The post தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கு பூர்வாங்கப்பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் appeared first on Dinakaran.