சிறந்த பூங்கா பராமரித்ததற்காக ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கேடயம்

 

ஊட்டி, மே 27: சிறந்த முறையில் பூங்கா பராமரிப்புக்காக ஊட்டி அருகே உள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது சிறந்த முறையில் பூங்காக்களை பராமரிக்கும் தனியார் பூங்கா உரிமையாளர்களுக்கும், அரசால் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள ஓடைக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சோபா தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சிறந்த முறையில் பூங்கா பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காய்கறி தோட்டங்களையும் அமைத்து பள்ளிக்கு தேவையான காய்கறிகளையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது.

விழாவில் சிறந்த முறையில் தனியார் பூங்கா பராமரிப்பவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிறந்த முறையில் அரசு பள்ளியில் பூங்கா அமைத்ததற்கு, ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, உதவி இயக்குனர் பெபிதா ஆகியோர் ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர் சோபாவிற்கு கேடயம் வழங்கினர்.

 

The post சிறந்த பூங்கா பராமரித்ததற்காக ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கேடயம் appeared first on Dinakaran.

Related Stories: