சென்னையில் இடி, மின்னல், காற்றுடன் பெய்த மழை காரணமாக 22 விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் இடி, மின்னல், காற்றுடன் பெய்த மழை காரணமாக 22 விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க வந்த 10 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. பெங்களூருவில் இருந்து 140 பேருடன் சென்னை வந்த விமானம் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது.

இந்தூரில் இருந்து 164 பேருடன் சென்னை வந்த விமானம் வானில் நீண்ட நேரமாக வட்டமடித்தது. பாட்னா, டெல்லி, கொல்கத்தா, கோவை, தூத்துக்குடியில் இருந்து வந்த விமானங்களும் வானில் நீண்ட நேரம் 1 வட்டமடித்தன. ராஞ்சி, விசாகப்பட்டினம், திருச்சி, மும்பை, டெல்லி, கோவை உள்ளிட்ட 12 இடங்களுக்கு விமானங்கள் தாமதமாக செல்கின்றன.

The post சென்னையில் இடி, மின்னல், காற்றுடன் பெய்த மழை காரணமாக 22 விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: