ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாப பலி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களது மகள் பத்ம(7), அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். கோடை விடுமுறையையொட்டி, இவர்களது வீட்டிற்கு வாலாஜாபேட்டையைச் சேர்ந்த உறவினர் கமல்ராஜ், 4ம் வகுப்பு மாணவி கிருஷிகா(9), 2ம் வகுப்பு மாணவன் மேகனேஸ்வரன்(7) ஆகியோர் வந்திருந்தனர். நேற்று மாலை இவர்கள் இருவரும் பத்மஸ்ரீயுடன் அங்குள்ள ஏரிக்கு சென்றனர். பின்னர், ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, அழமான பகுதிக்கு சென்ற பத்மஸ்ரீ, மேகனேஸ்வரன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி குரும்பர் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான். ஐஸ் வியாபாரியான இவரது மனைவி நூர்ஜகான். கோடை விடுமுறையையொட்டி, இவர்களது வீட்டிற்கு சின்னசேலம் மற்றும் சேலத்திலிருந்து உறவினர்களது குழந்தைகள் வந்திருந்தனர். நேற்று காலை 11 மணியளவில் ஷாஜகான் மகன் சமீர்(15), உறவினர்களின் மகனான ரியாஷ்(13), அவரது சகோதரி ரேஷ்மா(20), ரோஷினி(17) மற்றும் முகமது சபிக்(14), ஜாகிர் உசேன்(11) அசேன்(24) ஆகியோர் கெங்கவல்லி அருகேவலசக்கல்பட்டி ஏரியை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, 9ம் வகுப்பு மாணவர்களான சமீர் மற்றும் ரியாஷ் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: