கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி குரும்பர் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான். ஐஸ் வியாபாரியான இவரது மனைவி நூர்ஜகான். கோடை விடுமுறையையொட்டி, இவர்களது வீட்டிற்கு சின்னசேலம் மற்றும் சேலத்திலிருந்து உறவினர்களது குழந்தைகள் வந்திருந்தனர். நேற்று காலை 11 மணியளவில் ஷாஜகான் மகன் சமீர்(15), உறவினர்களின் மகனான ரியாஷ்(13), அவரது சகோதரி ரேஷ்மா(20), ரோஷினி(17) மற்றும் முகமது சபிக்(14), ஜாகிர் உசேன்(11) அசேன்(24) ஆகியோர் கெங்கவல்லி அருகேவலசக்கல்பட்டி ஏரியை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, 9ம் வகுப்பு மாணவர்களான சமீர் மற்றும் ரியாஷ் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
The post ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.