நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘‘நம்ம சாலை செயலி” மூலமாக பொதுமக்கள் அளித்த புகார்களின் எண்ணிக்கை மற்றும் தீர்வு காணப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தற்போது ‘‘நம்ம சாலை செயலி” மூலமாக பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் குறித்து அளிக்கும் புகார்களுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் வசதி உள்ளதால், அனைத்து துறைகளின் சாலை விவரங்களை ‘‘நம்ம சாலை செயலியின்” கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நம்ம சாலை செயலியின் கீழ் அனைத்து துறைகளின் சாலை விவரங்களையும் கொண்டு வரும் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் உள்பட துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சாலைகள் சீரமைப்பு பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.