இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், ‘‘வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும், அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை’’ என்றனர். ஒன்றிய அரசு தரப்பில், “முதியோர் மையங்களை அமைப்பதற்கான நிதியைத்தான் ஒன்றிய அரசு வழங்கும். இல்லம் அமைப்பது மாநில அரசின் பணி’’ என கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது ஒன்றிய அரசின் பணி தானே’’ என கேள்வி எழுப்பினர். பின்னர் மூத்த குடிமக்களை பாதுகாக்க அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே, இந்த வழக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் சமூக நலத்துறையின் முதன்மைச் செயலர்களை இந்த நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
The post தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.