தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார். மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்த நிலையில் திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: