சென்னை: குரூப் 4 பணியில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டிப்போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி வழங்கிய ஒருமாத கால அவகாசம் நாளை (24ம் தேதியுடன்) முடிகிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் இன்னும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
The post குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் போட்டிப் போட்டு விண்ணப்பம்: நாளையுடன் முடிகிறது காலக்கெடு appeared first on Dinakaran.