ஒரத்தநாடு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சாலையோரம் வீச்சு

*கல்நெஞ்சக்காரர்களுக்கு போலீஸ் வலை

ஒரத்தநாடு : திருவோணம் அருகே பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தையை துணி பையில் வைத்து வீசி சென்ற கல்நெஞ்சக்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் காவாளிப்பட்டி சரகம் மணிக்கிரான்விடுதிமேயாகுளம் கரையில் நேற்று காலை ஒரு கைப்பையில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதை கேட்ட அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் விரைந்து சென்று பையை எடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பைக்குள் பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தை இருந்தது. உடனே திருவோணம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் திருவோணம் சப்.இன்ஸ்பெக்டர் தன்ராஜ், மற்றும் திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தை சுமார் 2/1 கிலோ எடை இருந்தது.

இந்த குழந்தையை கைப்பற்றி திருவோணம் அரசு மருத்துவமனையில், சிக்சிக்கைகாக சேர்த்தனர். மருத்துவர்கள் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தஞ்சாவூர் சைல்ட் லைன் அதிகாரிகளுக்கு திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி தகவல் தெரிவித்தார்.

அங்கு விரைந்து வந்த சைல்டு லைன் அதிகாரிகள் குழந்தை மீட்டு சென்றனர். பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தையை கைப்பையில் அடைத்து வீசி சென்ற கல்நெஞ்சமுடியவர்கள் யார், என்று போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஒரத்தநாடு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சாலையோரம் வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: