போதையில் மளிகை கடைக்காரரை தாக்கிய திரைப்பட இயக்குநர் கவுதமனின் மகன் உள்பட 2 பேர் கைது

சென்னை: மளிகை கடைக்காரரை சரமாரியாக போதையில் தாக்கிய சினிமா இயக்குநரின் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். சென்னை அண்ணாநகர், 2வது நிழற்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் அனகாபுத்தூரை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் சண்முகம் தனது குடும்பத்துடன் ஆட்டோவில் வந்து இறங்கினார். அப்போது ஆட்டோவின் மீது பின்னால் வந்த சொகுசு கார் வேகமாக மோதியது. இதில் மளிகை கடைக்காரரின் குடும்பத்தினர் கீழே தடுமாறி விழுந்துள்ளனர். மேலும், அந்த ஆட்டோவும் சேதமானதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, ஆட்டோ மீது கார் மோதியது தொடர்பாக அதில் வந்தவர்களிடம் மளிகை கடைக்காரர் சண்முகம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. காரில் வந்த சினிமா மற்றும் சின்னத்திரை இயக்குநர் கவுதமனின் மகன் தமிழழகன் (24), அமைந்தகரையை சேர்ந்த நண்பர் சரத் (26) ஆகிய 2 பேரும் ஆத்திரம் அடைந்து, மளிகை கடைக்காரர் சண்முகத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் போதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் மளிகைக் கடைக்காரர் சண்முகம் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, போதையில் மளிகை கடைக்காரரை தாக்கிய தமிழழகன், அவரது நண்பர் சரத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் அன்றே காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

The post போதையில் மளிகை கடைக்காரரை தாக்கிய திரைப்பட இயக்குநர் கவுதமனின் மகன் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: