சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் ஆகியோர் நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தினர். அப்போது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணை நடத்துவற்கு அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், உயர் நீதிமன்றத்தில் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால், அதன் தீர்ப்பு வரும் வரை மாவட்ட நிர்வாகம் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும், இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த தலைமைச் செயலாளர் முருகானந்தம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
The post கட்சி கொடிக்கம்பம் அகற்றும் விவகாரம் தலைமை செயலாளருடன் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சந்திப்பு appeared first on Dinakaran.