தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் டாப்!!

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

*தேர்வு நடைபெற்ற நாட்கள் 28.03.2025 முதல் 15.04.2025 வரை
*தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 16.05.2025
*தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 8,71,239
*மாணவியர்களின் எண்ணிக்கை : 4,35,119
*மாணவர்களின் எண்ணிக்கை : 4,36,120

தேர்ச்சி விவரங்கள்

*தேர்ச்சி பெற்றவர்கள் : 8,17,261 (93.80%)
*மாணவியர் 4,17,183 (95.88%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 15,652.

*கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,94,264. தேர்ச்சி பெற்றோர் 8,18,743. தேர்ச்சி சதவிகிதம் 91.55 %.
*கடந்த மார்ச் / ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 2.25% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

கூடுதல் விவரங்கள்

*பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,485 இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,555 உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 4,930.
* 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,917.
*100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,867.

பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.52% சதவிகிதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.22% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

*தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 12,290 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 11,409 (92.83%).
*தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 237 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 230. (97.05%).
*தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 23,769. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 9,616 (40.46%).

The post தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் டாப்!! appeared first on Dinakaran.

Related Stories: