பெரம்பூர்: கிரைண்டர் ஆப் மூலம் பெண்ணை வரவழைத்து உல்லாசமாக இருந்த வாலிபரின் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடித்து தப்பினர். சென்னை வியாசர்பாடி எம்கேபி. நகர் 3வது லிங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹித்தேஷ் (26). துணிக்கடை வைத்துள்ளார். இவருடன் வசித்துவரும் தந்தை ராஜேஷ், தாய் ஆகியோர் உறவினர் திருமணத்துக்காக பெங்களூர் சென்றுள்ளனர். இந்தநிலையில், கிரைண்டர் என்ற தனியார் செயலி மூலம் ஏற்கனவே பழக்கமான நபர் ஒருவரை ஓரினச் சேர்க்கைக்காக ஹித்தேஷ் தனது வீட்டிற்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹித்தேஷ் அனைத்து நபர் மற்றும் அவருடன் ஒரு ஆண், ஒரு பெண் என 3 பேர் ஆட்டோவில் வந்துள்ளனர். இதன்பிறகு 2 பேரும் அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்துள்ளனர். இதன்பிறகு அவர்கள் ஹித்தேஷை கட்டிப்போட்டு விட்டு மீண்டும் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதன்பின்னர் ஹித்தேஷை பாத்ரூமில் அடைத்துவைத்துவிட்டு அவரது வீட்டில் இருந்து 30 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்துச்சென்றுவிட்டனர். இதன்பிறகு ஹித்தேஷ் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையில் போலீசார் வந்து விசாரித்தனர். திருட்டுப்போனது குறித்து ஹித்தேஷ் மாறி, மாறி கூறுவதால் உண்மையிலேயே நகைகள் திருட்டுப்போனதா என்றும் குறைவாக நகைகள் திருட்டுப்போயுள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆட்டோவில் இரண்டு ஆண், ஒரு பெண் வந்து சென்றது பதிவாகியுள்ளது. இதை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து ஆட்டோவின் பதிவெண் மற்றும் கிரைண்டர் செயலியில் வந்த நபர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்துகின்றனர்.
The post கிரைண்டர் ஆப் மூலம் ஆப்பு; உல்லாசத்தில் வீழ்ந்தார்… 30 சவரன் இழந்தார்… எம்கேபி. நகரில் பரபரப்பு appeared first on Dinakaran.