வெள்ள காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் கரையோர மக்கள் அவசர உதவிக்கு 1077

திருச்சி, மே 15: மேட்டூர் அணையில் இருந்து வெள்ள காலங்களில் திறந்துவிடப்படும் மிகை நீரால், திருச்சி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய கரையோர மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (மே 15) நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து மிக அதிக நீர் வெளியேற்றப்படும் போது திருச்சி மாவட்டத்தின் ஒருசில கரையோர பகுதிகளில் அதிக வௌ்ளப்பெருக்கு ஏற்படும். அதுபோன்ற தருணங்களில் காவோி ஆற்றின் கரையோர மக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை (Mock Drill) இன்று (மே 15) மாலை 4 மணிக்கு திருச்சி மாவட்டப் பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளதாவது, இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் திருச்சி மாவட்டத்தின் பனையக்குறிச்சி, திருவெறும்பூர் வட்டத்தில் கீழ அன்பில், லால்குடி வட்டம் கூகூர், முத்தரசநல்லூர், ரங்கம் வட்டத்தின் குணசீலம், முசிறி ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாதிரி ஒத்திகை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் பங்களிப்புடன் நடைபெறும். ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு விடப்படும். இவ்வொத்திகை நிகழ்ச்சி முன்களப் பணியாளர்களை (First Responders) கொண்டு நடத்தப்படவுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏதுமில்லை. மேலும், ஒத்திகையானது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பானது மட்டுமே. இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. காவிரி ஆற்றில் மிக அதிக வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தொிவிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொிவித்துள்ளார்.

The post வெள்ள காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் கரையோர மக்கள் அவசர உதவிக்கு 1077 appeared first on Dinakaran.

Related Stories: