திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் ஏரியில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார். பாலாஜி (22) என்பவர் நேற்றிரவு இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகே உள்ள ஏரிக்கு சென்றவர், கால் இடறி விழுந்து சேற்றில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார். இரவு முழுவதும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், இன்று காலை ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.