முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் முழு விவரம்
A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை – ரூ.40,000 அபராதம்
A2 குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.35,000 அபராதம்
A3 குற்றவாளி சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை – ரூ.18,500 அபராதம்
A4 குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை – ரூ.13,500 அபராதம்
A5 குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.18,000 அபராதம்
A6 குற்றவாளி பாபு-க்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.10,500 அபராதம்
A7 குற்றவாளி ஹெரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனை -ரூ.14,000 அபராதம்
A8 குற்றவாளி அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.8,500 அபராதம்
A9 குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.8,000 அபராதம்
The post ‘அந்த ‘சார்’கள் வெட்கித் தலைகுனியட்டும்’ – பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு appeared first on Dinakaran.