அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி உப்பளம். அசோகன் வீதியைச் சேர்ந்த மதி என்ற மதிவாணன் (30), வம்பா கீரப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்த சரவணன் (19), நோணாங்குப்பம் புதுகாலனியை சேர்ந்த ஈஸ்வரன்(20) என்பதும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 85 கிராம் கஞ்சா இலை பொட்டலங்கள், பைக் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post தவளகுப்பத்தில் டியூசன் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.