அப்போது காளிதாசின் அண்ணன் மகளுக்கும், வேல்மணிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உறவுமுறையில் அண்ணன், தங்கை என்பதால், காளிதாஸ் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேல்மணியை, சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வேல்மணி தனது நண்பர் விக்கி (எ) விக்னேஷ் (21) என்பவருடன் நேற்றுமுன்தினம் இரவு பைக்கில் வந்து, காளிதாசை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து நேற்று காலை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வேல்மணி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
The post அண்ணன் மகளை காதலித்ததை கண்டித்த சலூன் கடைக்காரர் வெட்டிக்கொலை: 2 பேர் கைது appeared first on Dinakaran.