இதனால் அதிர்ந்து போய் விட்டார் விக்ரம் மிஸ்ரி. அவரது எக்ஸ் கணக்கை தனிப்பட்ட கணக்காக மாற்றி விட்டார். தனிப்பட்ட கணக்காக மாற்றப்பட்டுவிட்டதால், அவரது எக்ஸ் பக்கத்தில் இனி யாரும் கருத்து தெரிவிக்க முடியாது. குறிப்பாக அவரது மகள்களை பற்றிய விமர்சனம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர் இதை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,’இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரின் மகளுடைய தனிப்பட்ட தொடர்பு விவரங்களை பகிரங்கமாக பகிர்ந்தது பொறுப்பற்ற மோசமான செயலாகும். இது தனிநபர் உரிமை மீறலாகும். இத்தகைய செயல்கள் அவரது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகக் கூட அமையலாம். குடிமைப் பணி அதிகாரிகளின் குடும்பத்தினர் மீதான இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்பதற்கில்லை. மேலும் இவை ஒழுக்கநெறியற்ற செயல். ஒவ்வொருவரும் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம். சுய கட்டுப்பாடு தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசின் மவுனம் ஏன்?
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை குறிவைத்து இணையத்தில் விமர்சிக்கப்படும் விவகரம் குறித்து மார்க்சிஸ்ட் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக விக்ரம் மிஸ்ரி மகளை அவமானப்படுத்தும் படத்தை பகிர்ந்து கொண்ட மார்க்சிஸ்ட்,’அரசாங்கம் ஏன் அமைதியாக இருக்கிறது? ட்ரோல்களுக்கு அவமானம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
மோடி எடுத்த முடிவுக்கு மிஸ்ரியை விமர்சிப்பது ஏன்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா தனது எக்ஸ் பதிவில்,’ பிரதமர் மோடி எடுத்த முடிவுக்கு வெளியுறவுத்துறை செயலாளரை ஏன் ட்ரோல் செய்யப்பட வேண்டும்? பயங்கரவாதிகளின் வகுப்புவாத வடிவமைப்பைத் தோற்கடித்ததற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்ததாலா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
The post இந்தியாவின் போர் நிறுத்தத்தை அறிவித்த விக்ரம் மிஸ்ரியை விமர்சிப்பது ஏன்..? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.