எல்லாமே உல்டாவா…மோடியை கலாய்த்த காங்கிரஸ்

புதுடெல்லி: பேசுவது மேட் இன் இந்தியா, பயன்படுத்துவது எல்லாம் வெளிநாட்டு பொருளா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் சுப்ரியா ஷிரினேட் இதுபற்றி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சிறிய கண்கள் கொண்ட விநாயகர் சிலையைக் குறிப்பிட்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பற்றிப் பிரதமர் மோடி பேசுகிறார். நாட்டு மக்களிடம் உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தச் சொல்கிறார். அது மிகவும் நல்ல விஷயம். ஆனா மோடிஜி ஒரு விஷயம் சொல்லுங்க.

* நீங்கள் சீனாவுடனான வர்த்தகத்தை தொடர்ந்து அதிகரித்தீர்கள், இது எங்களுக்கிடையேயான வர்த்தக பற்றாக்குறையை ரூ.8.50 லட்சம் கோடியாக அதிகரித்தது – அதற்கு யார் பதில் சொல்வார்கள்?
* நீங்களே ஏன் பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் போன்ற வெளிநாட்டு கார்களைப் பயன்படுத்துகிறீர்கள்?
* நீங்கள் ஏன் மான்ட்பிளாங்க் பேனாவைப் பயன்படுத்துகிறீர்கள்?
* உங்க கைக்கடிகாரம் ஏன் மொவாடோல இருந்து வந்தது?
* உங்க கண்ணாடி ஏன் மேபேக் மற்றும் பிவல்காரியில் இருந்து வந்தது?
* நீங்கள் ஏன் ஆப்பிள் போனை பயன்படுத்துகிறீர்கள்?
உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பகலுக்கும் இரவுக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு வித்தியாசம் இருக்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், மோடி பயன்படுத்தும் படங்களையும் பதிவிட்டுள்ளார்.

The post எல்லாமே உல்டாவா…மோடியை கலாய்த்த காங்கிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: