அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுவையும் அளித்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினர் முன்னேற்ற நலச் சங்கம் சார்பில் செல்லூர் ராஜூவை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் படை வீரர் சங்க மாநில பொதுச்செயலாளர் மேஜர் சுகுமார் கூறுகையில், ‘‘ராணுவ வீரர்களை இழிவாக பேசிய அவரை, எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அவருக்கு தேர்தலில் நிற்க சீட் கொடுக்ககூடாது. அவர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.
The post செல்லூர் ராஜூவை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.